ஒரு காலத்தில் கால்நடை, இன்று சக்கரப் பயணம் – பேருந்து வரலாறு & சுவாரஸ்ய தகவல்கள் - கட்டிடமும் கதையும்

வீடு கட்டும் அறிவு, சிவில் எஞ்சினீயரிங் குறிப்புகள், தமிழின் வரலாறு & கலாசாரம் பற்றிய பயனுள்ள பதிவுகள். உங்கள் கனவு வீடு முதல் நம் பாரம்பரியக் கதைகள் வரை அனைத்தையும் இணைக்கும் ஒரு பயணம்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

சனி, 30 ஆகஸ்ட், 2025

ஒரு காலத்தில் கால்நடை, இன்று சக்கரப் பயணம் – பேருந்து வரலாறு & சுவாரஸ்ய தகவல்கள்

 

ஒரு காலத்தில் கால்நடை, இப்போது சக்கர பயணம்.

ஒரு காலத்தில் பேருந்து என்பதே இல்லை. பணக்காரர்கள் மாட்டு வண்டியில் போவார்கள், மற்றவர்கள் கால்நடையாகவே பல மைல் தூரம் நடப்பார்கள். பயணம் என்பது மிகவும் சிரமமான விஷயம். ஆனாலும், உறவுகள் பிரியாமல் ஒன்றாக இருந்த காலம் அது.

பஸ்ஸை வேண்டாம் என்ற மக்கள்

முதன்முதலில் பேருந்துகள் வந்தபோது யாரும் அதை விரும்பவில்லை. "இது என்ன புதிய செலவு? எதற்கு இந்த வண்டி?" என்று எல்லோரும் தயங்கினார்கள். அதனால், பேருந்துகள் எல்லாம் காலியாகவே ஓடின. உரிமையாளர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது.

வீட்டுக்கே வந்த பஸ்

இதை மாற்ற, பேருந்து உரிமையாளர்கள் ஒரு நல்ல யோசனை செய்தார்கள். யாராவது பேருந்து நிலையத்தில் சொன்னால் போதும், அடுத்த நாள் காலை, பேருந்து நேராக அவர்கள் வீட்டுக்கே வந்து ஏற்றிக்கொண்டு போகும். அதிலும், இந்த பயணம் இலவசம்! போக வேண்டிய இடத்திலேயே இறக்கிவிடும். பேருந்து நிலையம் கூடத் தேவையில்லை. எங்கிருந்து கை காட்டினாலும் பேருந்து நின்றுவிடும். சிலசமயம் ஓட்டுநரே சாலையில் நின்று, "எங்கேனும் போக வேண்டுமா?" என்று கேட்டு மக்களை அழைத்துச் செல்வார்.

மக்களின் பழக்கம் மாறியது

முதலில் புதியதாகத் தோன்றிய இந்த வசதி, பிறகு சுகமாக மாறியது. சில வாரங்களிலேயே மக்கள் நடையையும், மாட்டு வண்டிகளையும் மறந்துவிட்டார்கள். பிறகு மெல்ல மெல்லக் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தார்கள். பஸ் பயணம் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. 

சில சுவாரஸ்யத் தகவல்கள்

  • இந்தியாவின் முதல் பேருந்து 1903-ல் மும்பையில் ஓடியது.

  • 1920-களில் மதுரை, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் தனியாருக்குச் சொந்தமான பேருந்துகள்தான் ஓடின.

  • 1972-ல் அரசு பேருந்துகளைத் தன்னகத்தே எடுத்துக்கொண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் உருவானது.

  • அந்தக் காலத்தில் பேருந்துகளில் நடத்துநர் இல்லை. ஓட்டுநரே பணம் வாங்குவார். டிக்கெட் கிடையாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

Responsive Ads Here

Pages